சுற்றுச்சூழல், நீர் மற்றும் விவசாய அமைச்சகம், சவூதியில் உள்ள ஒட்டக உரிமையாளர்களுக்கு அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், அது வழங்கும் சேவைகளிலிருந்து பயனடைவதற்காகவும் தங்கள் ஒட்டகங்களுக்கு அடையாள எண் இடுதல் போன்ற ஆன்லைன் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது.
அமைச்சகம் ஒட்டகங்களை எண்ணும் மின்னணு சேவையை அறிமுகப்படுத்திப் பயனாளி அதை எண்ணிட்ட பின்னரே உரிமையை மாற்ற முடியும் என்றும், எண் இடப்படாத ஒட்டகங்களின் விற்பனை, கொள்முதல் அல்லது உரிமையை மாற்றுவதில் வர்த்தகம் செய்ய அனுமதி இல்லை என்றும் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
ஒட்டகங்களின் எண்ணிக்கை தொடர்பான விதிமுறைகளுக்கு இணங்கத் தவறும் உரிமையாளர்களுக்கு எதிராகத் தண்டனை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், நடவடிக்கைகளில் அபராதம் மற்றும் உரிமையாளர்களுக்கான ஆன்லைன் சேவைகளை ரத்து செய்தல் ஆகியவை அடங்கும் என்றும் அமைச்சகம் எச்சரித்துள்ளது.
ஒட்டகங்களின் எண்கள், வகைகள், பாலினம் மற்றும் புவியியல் விநியோகம் பற்றிய துல்லியமான தரவை வழங்குவதோடு, உரிமையை விற்பதற்கும் மாற்றுவதற்கும் நடைமுறைகளை எளிதாக்குவதற்கு ஒட்டகங்களுக்கான தரவுத்தளத்தை அமைப்பதன் ஒரு பகுதியாக அமைச்சகம் ஆன்லைன் எண்ணிடுதல் முறையை அறிமுகப்படுத்திலுள்ளது.
இது அமைச்சகத்தினால் னால் வழங்கப்படும் சேவைகளைப் பெறவும், தொற்றுநோய்கள் மற்றும் நோய்கள் ஏற்பட்டால், பொருளாதார, உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகள் மற்றும் சவூதியில் ஒட்டக இனங்களை ஒருங்கிணைப்பதற்கு உரிமையாளர்களுக்குப் பங்களிக்க உதவுகிறது.
ஒட்டக உரிமையாளர்கள், தங்களுடைய ஒட்டகங்களுக்கு எண்ணிட விரும்புவோர், NAAMA என்ற இணைய தளத்திற்குச் சென்று (https://naama.sa) அல்லது ஒருங்கிணைந்த எண்ணை (939) அழைத்து விசாரணைகளுக்குப் பதிலளிப்பதன் மூலம் எண்ணிடல் கோரிக்கையை மின்னணு முறையில் சமர்ப்பிக்கலாம்.